பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றுசட்டசபையில் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:- பெரியார் “ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணியைச்செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்” என்று அறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காக போராடியவர்தான் தந்தை பெரியார். ‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையே அடிப்படையாக கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய தந்தை பெரியார் மானமும், அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்திய போராட்டங்கள் யாராலும் ‘